முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் உறவினர் வீடுகளில் லஞ்ச ஓழிப்பு துறை சோதனை!

திமுக ஆட்சியின் போது சுற்றுலா துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ்ராஜன். இவர் குமரி மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார்.
பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சுரேஷ் ராஜன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஓழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இது தொடர்பாக லஞ்ச ஓழிப்பு துறை போலீஸ் டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் சுரேஷ்ராஜன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது உறுதியானது. இதை தொடர்ந்து சுரேஷ்ராஜன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.
திண்டுக்கல், விருதுநகர், திருச்சி ஆகிய 3 மாவட்ட லஞ்ச ஓழிப்பு துறை போலீஸ் அதிகாரிகளை கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் சுரேஷ் ராஜன் வீடு, அலுவலகம், மற்றும் உறவினர்களின் வீடுகளை கண்காணித்தனர்.
இன்று காலை அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வெள்ளாளர் தெருவில் உள்ள சுரேஷ் ராஜன் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றபோது வீட்டில் சுரேஷ்ராஜன், அவரது மனைவி பாரதி, மகன் மற்றும் உறவினர்கள் இருந்தனர். அவர்களிடம் சோதனைக்கு வந்த விபரத்தை அதிகாரிகள் தெரிவித்து வீட்டுக்குள் சென்று ஆவணங்களை வாங்கி பார்த்து விசாரணையில் ஈடுபட்டனர்.
சுரேஷ் ராஜன் வீட்டில் சோதனை தொடங்கிய அதே நேரத்தில் வெள்ளாளர் தெருவில் உள்ள அவரது சகோதரி உமா வீடு, வெள்ளாளர் கிழக்கு தெருவில் உள்ள இரும்பு ஆலை அலுவலகம், தம்மத்து கோணம் எறும்பு காட்டில் உள்ள வலை கம்பெனி, வெள்ளாளர் மேற்கு தெருவில் உள்ள சுரேஷ் ராஜனின் மாமனார் வீடு, பர்வத்தினி தெருவில் உள்ள கொழுந்தியாள் வீடு, பழவூரில் உள்ள இரும்பு ஆலை ஆகிய 7 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை தனிதனிக்குழுக்களாக சென்று சோதனை நடத்தினர்.
சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. அவற்றை கைப்பற்றிய போலீசார் சுரேஷ் ராஜன் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திமுக முன்னாள் அமைச்சர்களில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், நிலம் அபகரித்ததாகவும் இதுவரை 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ராஜன் 9வது முன்னாள் அமைச்சராவார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications