நிலமோசடி வழக்குகளில் தி.மு.க.வினரை கைது செய்வது சரியே: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சத்தியமங்கலம்: நிலப்பறிப்பு வழக்குகளில் தி.மு.க.வினரை தமிழக போலீசார் கைது செய்யும் செயல் சரியானது தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம் நகர் மன்ற தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சுந்தர் என்பவரை ஆதரித்து முன்னாள் மத்திய ஆ.வி.கே.எஸ். இளங்கோவன் பிராசராம் செய்ததாவது.
தமிழகத்தில் மக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு கடும் அவப் பெயர் உள்ளது. இந்நிலையில் தி.முக.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு தான் ஏற்படும்.
நாட்டின் நலன் கருதி உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். அப்பாவி மக்களின் நிலங்களை ஏமாற்றி அபகரித்த தி.மு.க.வினரை அ.தி.மு.க. அரசு கைது செய்து வருகிறது.
ஆனால், நிலே மோசடியில் கைதாகும் தி.மு.க.வினர் விடுதலை போராட்ட தியாகிகள் போல் நடந்து கொள்கின்றனர். சரியான புகாரின் பேரில் முறையான ஆவணங்களின் அடிப்படையில்தான் தி.மு.க.வினர் கைது செய்யப்படுகின்றனர். இது சரியான நடவடிக்கை என்பது தான் எனது கருத்து, என்றார்.












Click it and Unblock the Notifications