மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி கசாப் அப்பீல்-நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் அமீன் கசாப் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். இவன் மீதான வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம், கசாப்புக்கு மரண தண்டனை விதித்தது. இதை பம்பாய் உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
இதையடுத்து சிறை அதிகாரிகள் மூலம் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தான் கசாப். அவன் சார்பி்ல மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் வாதாடவுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications