நாடாளுமன்றத்தை விட உயர்ந்தவர் அன்னா ஹஸாரே- சொல்கிறார் கேஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
டெல்லி: இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் நாடாளுமன்றத்தை விட உயர்ந்தவர்கள். அந்த வகையில் அன்னா ஹஸாரேவும் நாடாளுமன்றத்தை விட உயர்ந்தவர்தான். எனவே அவர் நாடாளுமன்றத்திற்கு நெருக்கடி கொடுப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டின் குடிமக்கள் அனைவருமே நாடாளுமன்றத்தை விட உயர்ந்தவர்கள்தான். அனைவருமே நாடாளுமன்றத்தை கேள்வி கேட்க முடியும். எனவே அன்னாவும் நாடாளுமன்றத்தை விட உயர்ந்தவர்தான். அவராலும் நாடாளுமன்றத்தை நெருக்க முடியும். அதில் தவறில்லை.

அரசியல் சாசனத்தைப் பொறுத்தவரை, நாட்டு மக்கள்தான் நாடாளுமன்றத்தை விட உயர்ந்தவர்கள். அன்னாவும், இந்த நாட்டு மக்களும்தான் உயர்ந்தவர்கள்.

காங்கிரஸை எதிர்த்து ஹிஸார் இடைத் தேர்தலில் எங்களது குழு பிரசாரம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. காங்கிரஸ் கட்சிதான் ஜன் லோக்கபால் மசோதாவை வர விடாமல் தடுத்து வருகிறது. காங்கிரஸுக்கு எதிரான பிரசாரம் என்று அன்னா கூறியது, ஒட்டுமொத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியையும் எதிர்த்துதான்.

எங்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறி செயல்படும் கட்சிகளை எதிர்த்து நாங்கள் உ.பி. தேர்தலில் பிரசாரம் செய்வோம். பாஜகவுக்கு எதிராகவும் பிரசாரம் செய்வோம் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+