உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைவோ்ம் என்ற பயத்தில் உள்ளது திமுக- சைதை துரைசாமி
சென்னை: உள்ளாட்சித் தேர்தலிலிலும் தோற்று விடுவோம் என்ற பயத்தில் துவண்டு போய்க் காணப்படுகின்றனர் திமுகவினர் என்று சென்னை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் சைதை துரைசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது டி.பி. சத்திரம் பகுதியில் சைதை துரைசாமி பேசுகையில்,
தேர்தல் பிரசாரத்துக்காக நான் செல்லும் இடங்களில் எல்லாம் முந்தைய திமுக அரசு பற்றியும், சென்னை மாநகராட்சி நிர்வாகம் குறித்தும் மக்கள் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் மக்கள் நலப்பணிகளில் அக்கறை செலுத்தாத திமுகவுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் கற்பிக்கத் தயாராக உள்ளனர். பல இடங்களில் அடிப்படை வசதிகள் செய்யாததால் திமுக கவுன்சிலர்கள் பிரசாரத்துக்கு செல்லவே தயக்கம் காட்டி வருகின்றனர்.
திமுக மேயர் வேட்பாளர்களும், கவுன்சிலர் வேட்பாளர்களும் தோல்வி பயத்தில் துவண்டு போய் இருக்கிறார்கள். புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னையின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கண்டவர் முதல்வர் ஜெயலலிதா என்றார் அவர்.












Click it and Unblock the Notifications