காரைக்குடியில் மட்டும் திமுக- காங்கிரஸ் மறைமுகமாக கூட்டணி: நல்லகண்ணு குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெஜினா பாப்பாவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் நல்லகண்ணு பேசியதாவது,
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் பரவி உள்ளனர். இந்த நகரில் விடுதலை போராட்ட வீரர்கள், படித்தவர்கள், பண்பாளர்கள், தமிழ் பண்பாடு உடையவர்கள் என பலர் முக்கியஸ்தர்கள் உள்ளனர்.
இந்த பகுதியைச் சேர்ந்த ப.சிதம்பரம் முதலில் நிதியமைச்சராக இருந்து தற்போது உள்துறை அமைச்சராக உள்ளார். இப்போது அவர் தேனி அருகே உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுள்ளார். அவர் ஏன் அம்மன் கோயிலுக்கு செல்ல வேண்டும்.
ஓட்டு போட்ட மக்களை புறக்கணித்துவிட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராததால் தான் அவருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. பாவம்.
தமிழகம் முழுவதும் திமுக-காங்கிரஸ் கூட்டணி கிடையாது என்று கூறிவிட்டு காரைக்குடியில் மட்டும் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications