சென்னையிலிருந்து திருமங்கலத்துக்கு வந்து சேர்ந்த இலவச மிக்சிகள்- பரபரப்பு!

மதுரை திருமங்கலம் தேர்தல் பரபரப்புக்குப் பெயர் போனது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் விளையாடிய பணம், பொருள் விளையாட்டு மக்களால் மறக்க முடியாதது. திருமங்கலம் பார்முலா என்ற பெயரே இந்த இடைத் தேர்தலுக்குப் பின்னர் உருவாகி புகழ் பெற்றது. அப்படிப்பட்ட திருமங்கலத்தால் இன்று இன்னொரு பரபரப்பு ஏற்பட்டது.
இன்று பிற்பகலில் திருமங்கலத்திற்கு ஒருலாரி நிறைய இலவச மிக்சிகள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இந்த லாரி அங்குள்ள நகராட்சி திருமண மண்டபத்திற்கு வந்தன. அவற்றை ஊழியர்கள் கல்யாண மண்டபத்திற்குள் இறக்கி வைத்தனர்.
தகவல் அறிந்ததும் திமுகவினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் விரைந்து வந்து போராட்டத்தில் குதித்தனர். தேர்தல் விதிகளை மீறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர். இலவச மிக்சிகளை வழங்கக் கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தாசில்தார் மோகன், வருவாய் ஆய்வாளர் பிரதாப் சிங் ஆகியோர் போராட்டம் நடத்திய கட்சிக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் மிக்சிகளை திருப்பி அனுப்ப முடிவானது.
இதைத் தொடர்ந்து இறக்கிய மிக்சிகளை மீண்டும் லாரியில் ஏற்றினர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications