திருச்சி மேற்குத் தொகுதியில் ஜெயலலிதா இன்று சூறாவளி பிரசாரம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா திருச்சி மேற்குத் தொகுதியில் இன்று சூறாவளிப் பிரசாரம் செய்யவுள்ளார்.
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் பரஞ்சோதி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார். இத்தொகுதியில் திமுக சார்பில், நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு களமிறக்கப்பட்டுள்ளதால் போட்டி கடுமையாக உள்ளது. இதனால் அதிமுகவினர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இன்று ஜெயலலிதா தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 7 இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் ஜெயலலிதா அங்கு பெரியார் சிலை பஸ் நிறுத்தம், புத்தூர் நான்கு ரோடு, உறையூர் நாச்சியார் கோயில், தென்னூர் மந்தை, செடல் மாரியம்மன் கோயில், டிவி.எஸ். டோல்கேட், காஜாமலை பிரதான சாலை, எடமைப்பட்டி புதூர் ஆகிய இடங்களில் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார்.
ஜெயலலிதா வருவதையொட்டி அதிமுகவினர் குஷியடைந்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தையும் அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நாளை கருணாநிதி
இதேபோல திமுக வேட்பாளர் நேருவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி நாளை பிரசாரம் செய்து பேசுகிறார். திருச்சி புத்தூர் நான்கு ரோடு சந்திப்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி உரை நிகழ்த்துகிறார். மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஸ்டாலின் தொடங்கினார்
மறுபக்கம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தை நேற்றே தொடங்கி விட்டார். நான்கு நாட்களுக்கு அவர் தொகுதியை வலம் வருகிறார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications