வெளியுறவு செயலர் இலங்கையில்- கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!

மத்திய வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் மத்தாய் இலங்கை போயுள்ளார். போவதற்கு முன்பு சென்னை வந்த அவர் முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந்தித்தார். அப்போது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வரும் செயல் குறித்து கடுமையாக பேசிய முதல்வர் ஜெயலலிதா, இந்தப் பிரச்சினையை இந்திய அரசு தேசியப் பிரச்சினையாக அணுக வேண்டும். இந்தப் பிரச்சினையில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் சமீப காலமாக தொடர்ந்து இந்திய மீனவர்களைத் தாக்கி வரும் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த காலிப்படையினர் நேற்றும் மண்டபம் பகுதி மீனவர்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.
மண்டபம் பகுதியைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படை ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் மீனவர்களின் வலைகளை பறித்து கிழித்து எறிந்தனர். மீன்களையும் கடலில் தூக்கிப் போட்டனர். பின்னர் தமிழக மீனவர்களை ஓடுமாறு மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து தமிழக மீனவர்கள் அங்கிருந்து வேகமாக கரைக்குத் திரும்பி விட்டனர்.
இலங்கைக் கடற்படையின் இந்த காலித்தனம் தொடர்வது குறித்து இதுவரை மத்திய அரசு வாய் திறக்காமல் மூடியபடி இருப்பது மீனவர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications