தேர்தல் அதிகாரிகள் மீது ஆளுநர் ரோசைய்யாவிடம் திமுக புகார்
சென்னை: தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வதாக தமிழக ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து புகார் மனு கொடு்கக திமுக திட்டமிட்டுள்ளது.
வரும் 17, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. பெரும்பாலான கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. கட்சித் தலைவர்கள் ஊர், ஊராகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை சுமூகமாக நடத்தத் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில் திமுக குழு இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து தேர்தல் அதிகாரிகள் மீது புகார் கொடுக்கவிருக்கிறது.
தேர்தல் அதிகாரிகள் திமுகவினரைப் புறக்கணிப்பதாகவும், பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டி.கே.எஸ் இளங்கோவன் தலைமையில் மா. சுப்பிரமணியன், ஜே.அன்பழகன் உள்பட 200 கவுன்சிலர் வேட்பாளர்கள் கொண்ட குழு ஆளுநரை சந்திக்கவிருக்கிறது என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications