Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆவடியில் ஓட்டு சேகரிக்க சென்றவர்களிடையே மோதல்: ஒருவர் காயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆவடியில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க சென்ற 2 கோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்டு, போலீசார் வந்து சமாதானப்படுத்தினர்.

சென்னை, ஆவடியில் உள்ள வெள்ளனூரா பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆரிக்கமேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் ராஜ்விக்னேஷ்வர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இதில் செந்தில்குமாருக்கு ஆதரவாக தலசையா என்பவரும், ராஜ்விக்னேஷ்வருக்கு ஆதரவாக பழனி என்பவரும் ஓட்டு சேகரித்து வருகின்றனர். ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள 2 பேரும் ஆரிக்கமேடு பகுதியை சேர்ந்தவர்கள். இந்நிலையி்ல் பழனியிடம் உள்ளூரை சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படாமல் இருப்பது குறித்து தலசையா கேட்டுள்ளார்.

இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைக்கலப்பாக மாறியது. இதில் பழனிக்கு காயம் ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்த வேட்பாளர் ராஜ்விக்னேஷ்வர், அவரது ஆதரவாளர்கள் 200 பேருடன் வந்து கன்னடபாளையம் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த, ஆவடி உதவி கமிஷனர் மனோகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலசையாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பழனியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+