தயாநிதி மாறன் வீடுகளில் சிபிஐ ரெய்டு எதிர்பார்த்த ஒன்றுதான்- திமுக விளக்கம்
சென்னை: 2ஜி விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ நடத்திய சோதனை எதிர்பார்த்த ஒன்றுதான். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று திமுக விளக்கம் அளித்துள்ளது.
ஏர் செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்றது, அதன் பின்னர் ஏர் செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்கியது, தயாநிதி மாறன் வீட்டில் சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளை வழங்கிய விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அப்பல்லோ மருத்துவமனை அதிபர் பி.சி. ரெட்டியின் மகள் சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதையடுத்து இவர்களின் வீடுகள், அலுவலகங்கள், சன் டிவி அலுவலகம் ஆகியவற்றில் இன்று சிபிஐ ரெய்டு நடத்தியது.
படு தாமதமாக நடந்து வரும் இந்த ரெய்டு குறித்து திமுக கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சித் தரப்பில் கூறுகையில், சோதனை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என்றும், இது தங்களுக்கு ஆச்சரியம் அளிக்க வில்லை என்று விளக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications