திருச்சியில் பால் நிறுவனம் அனுப்பிய ரூ. 31 லட்சம் பணம் சிக்கியது- தேர்தல் அதிகாரிகள் விசாரணை
திருச்சி: திருச்சி அருகே நடந்த வாகனச் சோதனையின்போது காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 31 லட்சம் பணம் சிக்கியது. அந்தப் பணத்தை ஆவின் பால் நிறுவனத்துக்கு அனுப்பியதாக கார் டிரைவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது வாக்காளர்களுக்குக் கொடுக்க அனுப்பப்பட்ட பணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து கடைசிக் கட்ட வாக்கு சேகரிப்பு சூடு பிடித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே வாகனச் சோதனையில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வழக்கம் போல பெருமளவில் பணமும் சிக்கியுள்ளது. இவை வாக்காளர்களுக்காக கொடுக்க கொண்டு வரப்பட்ட பணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொள்ளிடம் சோதனைச் சாவடியில் ஒரு காரை அதிகாரிகள் மடக்கி சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ 31 லட்சம் பணம் இருந்தது. காரை ஓட்டி வந்த நேதாஜி என்பவரைப் பிடித்து அதிகாரிகள் விசாரித்தபோது திருச்சியில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு, விஜய் பால் நிறுவனம் கொடுத்தனுப்பிய பணம் இது என்றார். இருப்பினும் அதிகாரிகளுக்கு சந்தேகம் தீரவில்லை.
பணத்தைப் பறிமுதல் செய்த அவர்கள் நேதாஜியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications