பதவியை துறந்து விட்டு கோவில் கோவிலாக போகட்டும் பிரதமர்- கத்காரி பேச்சு

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: எதற்கெடுத்தாலும், தெரியாது, முடியாது என்று பேசுகிறார் பிரதமர் மன்மோகன் சிங். இப்படிப்பட்டவருக்கு எதற்குப் பிரதமர் பதவி. ஊழலை ஒழிக்க முடியாத இவர் பேசாமல் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு கோவில் கோவிலாக யாத்திரை போகலாம் என்று பேசியுள்ளார் பாஜக தலைவர் நிதின் கத்காரி.

டேராடூனில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கத்காரி. அப்போது அவர் பேசுகையில்,

ஊழலை ஒழிக்க தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படுத்தி விட்டார். எதைக் கேட்டாலும் இல்லை, தெரியாது, முடியாது என்றுதான் பேசுகிறார். அவர் பேசாமல் பதவியிலிரு்து விலகி, பத்ரிநாத், கேந்திரநாத், பொற்கோவில் என யாத்திரை போகலாம். அவருக்கு இப்போது தேவை நல்ல ஓய்வு.

2ஜி ஊழலில் தனக்கு மட்டும் தொடர்பு இல்லை. காங்கிரஸ் கட்சியில் வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளது என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், 2ஜி வழக்கு தொடர்பாக மேலும் சில ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் போவதாகவும், அதில் மேலும் பல உண்மைகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி என்னிடம் தெரிவித்துள்ளார் என்றார் கத்காரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+