ரயில்கள் எல்லாம் 'புல்': தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க 1500 சிறப்பு பஸ்கள்

தீபாவளிப் பண்டிகை வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் 23ம் தேதி முதல் பெரும்பாலான ரயில்கள், அரசு-தனியார் பஸ்களில் இடங்கள் நிரம்பிவிட்டன.
கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. ஆனால், அவையும் உடனடியாக நிரம்பி வருகின்றன.
இதனால் 24, 25ம் தேதிகளில் சிறப்பு பஸ்களை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழங்கள் திட்டமிட்டுள்ளன. சென்னை கோயம்பேட்டில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும், பிற நகர்களில் இருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னையிலிருந்து மட்டும் வழக்கமாக செல்லக்கூடிய 850 பஸ்கள் தவிர கூடுதலாக 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
பிற போக்குவரத்து கழகங்களும் நூற்றுக்கணக்கில் சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளன. மொத்தத்தில் மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 1,500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
இதில் விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் 450 சிறப்பு பஸ்களும், சேலம் போக்குவரத்துக் கழகம் சார்பில் 145 சிறப்பு பஸ்களும், மதுரை போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதலாக 250 சிறப்புப் பேருந்துகளும், கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் 200 சிறப்பு பஸ்களும், திருநெல்வேலி போக்குவரத்துக் கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்களும் இயக்கப்படவுள்ளன.
அதே போல தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்களும் கூடுதலாக நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications