சிபிஐ அதிகாரிகளை உள்ளே விட மறுத்த தயாநிதி வீட்டு வாட்ச்மேன்!
சென்னை: முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் வீட்டுக்கு சோதனை நடத்த வந்த சிபிஐ அதிகாரிகளை உள்ளே விட மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் போட் கிளப் முதல் அவென்யூ வீட்டில் ரெய்ட் நடத்த காலை 6.30 மணிக்கு அதிகாரிகள் வந்தனர்.
டெல்லி சிபிஐ துணை எஸ்.பி. ரவி கம்பீர் தலைமையில் ஒரு பெண் உள்பட 6 அதிகாரிகள் கொண்ட டீம் தயாநிதியின் வீட்டுக்கு வந்தனர்.
கதவைத் திறக்குமாறு வாசலில் நின்ற காவல்காரரிடம் கேட்டனர். ஆனால் அவர் திறக்க மறுத்து விட்டார்.
அரை மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள், மீண்டும் வாட்ச்மேனிடம் கதவைத் திறக்கச் சொல்ல, நீங்கள் ரெய்ட் நடத்துவது தொடர்பாக எங்களுக்கு தகவல் ஏதும் வரவில்லை என்று பதில் வந்துள்ளது.
அப்போது வேலைக்காரர் ஒருவர் தயாநிதி வீட்டுக்கு வந்தார். அந்த வேலைக்காரரை மட்டும் கேட்டை திறந்து வீட்டுக்குள் விட்ட வாட்ச்மேன் சிபிஐ அதிகாரிகளை உள்ளே விட மறுத்தார்.
இதையடுத்து கதவை உடனடியாகத் திறக்காவிட்டால், உன்னை கைது செய்வோம் என அதிகாரிகள் மிரட்டவே, வாட்ச்மேன் கதவைத் திறந்தார்.
இதையடுத்து 7.35 க்கு சிபிஐ அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். இந் நிலையில் 10.30 மணியளவில் திமுக தலைவரின் மகன் மு.க.தமிழரசு அந்த வீட்டுக்கு வந்தார். அவரை அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர்.
மிக அமைதியான போட் கிளப் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டுக்கு வந்த விவரம் தெரிந்தவுடன் ஏராளமான பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி சேனல்களின் வாகனங்களும் குவிந்துவிட, அந்தப் பகுதியே பெரும் பரபரப்புக்குள்ளானது.
மேலும் ரெய்ட் நடப்பது தெரிந்து திமுக பிரமுகர்களும் கார்களில் வந்து குவிந்ததால் அந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் ஈடுபட்டது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications