தேமுதிக வேட்பாளராகப் போட்டியிடும் மனைவிக்காக பிரச்சாரம் செய்த ஏட்டு பணிநீக்கம்
திருவண்ணாமலை: உள்ளாட்சித் தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த போலீஸ் ஏட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலையரசி, உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க. சார்பில், செங்கம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இதனால், உள்ளாட்சித் தேர்தலில் தனது மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஏட்டு கிருஷ்ணமூர்த்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதை மோப்பம் பிடித்த அவரது எதிர் தரப்பு இதை வீடியோ எடுத்து ஆதாரத்துடன் மாவட்ட எஸ்.பி. சாமுண்டீஸ்வரி கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி.சாமுண்டீஸ்வரி விசாரித்து கிருஷ்ணமூர்த்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஏட்டு கிருஷ்ணமூர்த்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.
மனைவி மீது இருந்த அன்பில், இருந்த அரசு பணி போனதே என சோக முகத்தோடு காட்சியளிக்கிறார் ஏட்டு கிருஷ்ணமூர்த்தி.












Click it and Unblock the Notifications