வாக்காளர்களுக்கு வழங்க வேட்டி, சேலை கடத்திய தே.மு.தி.க. பெண் வேட்பாளர் கைது
பண்ருட்டி: புதுச்சேரியில் இருந்து பண்ருட்டி வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை கடத்திய தே.மு.தி.க. பெண் வேட்பாளர் சவும்யா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பேது அந்த வழியாக புதுவை மாநில பதிவு எண்ணுடன் ஒரு ஆட்டோ வேகமாக வந்தது. அந்த ஆட்டோவை போலீசார் வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த ஆட்டோவில் கட்டப்பட்டிருந்த 10 மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதில் 182 சேலைகளும், 335 சட்டைகளும் இருந்தன. இது குறித்து ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் விசாரித்த போது, அவர் பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த முருகன் மனைவி சவுமியா என்றும், அவர் பண்ருட்டி நகராட்சி 27வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுகின்றார் என்றும் தெரிந்தது.
மேலும், வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க அந்த சேலைகள், சட்டைகளை அவர் ஆட்டோவில் கொண்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து தே.மு.தி.க. வேட்பாளர் சவுமியாவும், ஆட்டோ டிரைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொண்டு வந்த வேட்டி, சேலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 19 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications