பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
மதுரை : பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சி.பி.ஐ.இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த மாதம் செப்டம்பர் 11 ம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் நடைபெற்றது. இதில் வெடித்த கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 6 பேர் பலியானார்கள்.
இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், தலித் அமைப்புகளும் கோரி வந்தன. இந்நிலையில், வக்கீல் முருகன், பகுஜன் சமாஜ் நிர்வாகி குரு விஜயன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
துப்பாக்கி சூடு குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் தாமுவேல்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பரமக்குடி துப்பாக்கி சூடு, அதை தொடர்ந்து மதுரை சிந்தாமணியில் நடந்த மோதல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிக அளவு நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயசந்திரன், பெரிய கருப்பையா ஆகியோர், சி.பி.ஐ. இயக்குனர், டி.ஜி.பி., ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த விசாரணையை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications