கோவை கொங்கு முன்னேற்றக் கழகத்தில் பிளவு: கொங்கு மக்கள் பேரவை உதயம்
கோவை: கோவை மாநகர கொங்கு முன்னேற்றக் கழகத்தில் பிளவு ஏற்பட்டு கொங்கு மக்கள் பேரவை என்னும் புதிய அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர கொமுங்கு முன்னேற்றக் கழகத்தின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள் பங்கேற்ற அவசரக் கூட்டம் ராம்நகரில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் கருத்தை கேட்காமல் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த சர்வாதிகார போக்கை கண்டித்து கோவை மாநகர கட்சி நிர்வாகம் முழுமையாக கலைக்க முடிவு செய்யப்பட்டது.
கோவை மாநகர கொமுகவில் இருந்து விலகி, கொங்கு சமுதாய மக்களின் நலன் கருதி, கொங்கு மக்கள் பேரவை என்ற அமைப்பை துவக்கியுள்ளனர்.
கோவை மாநகரைத் தொடர்ந்து பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளிலும் கொமுக கலைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கொமுக மாநில நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications