நாடு முழுவதும் நிலக்கரிக்கு பெரும் தட்டுப்பாடு: மின்சார உற்பத்தி கடுமையாக பாதிப்பு
டெல்லி: நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் மிக பலத்த மழை பெய்ததாலும், தெலுங்கானா போராட்டம் காரணமாக ஆந்திராவில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவது பாதிக்கப்பட்டதாலும், கோல் இந்தியா நிறுவனத்தின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாலும் நாடு முழுவதும் நிலக்கரிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
5 மின் உற்பத்தி நிலையங்களை நடத்தி வரும் மத்திய அரசின் நேஷனல் தெர்மல் பவர் கார்பரேசன் நிறுவனத்திடம் இன்னும் 1 நாளுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது. 13 நாட்களுக்குத் தேவையான நிலக்கரியை இந்த நிறுவனம் வழக்கமாக கையிருப்பில் வைத்திருப்பது வழக்கம். ஆனால், இந்த நிறுவனத்துக்கு வேலை நிறுத்தம் காரணமாக, கோல் இந்தியா நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய நிலக்கரி வந்து சேராததால் கிட்டங்கிகள் காலியாகிவிட்டன.
இதனால் இந்த 5 மின் உற்பத்தி நிறுவனங்களிலும் மின் உற்பத்தி பெருமளவு சரிந்துவிட்டது. இதனால் டெல்லி, மேற்கு வங்கம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மின்சார சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாகமே கர்நாடகத்தில் பெரும் மின்சாரப் பற்றாக்குறை உண்டு. இப்போது இந்த நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. பெங்களூரில் நகரில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 முறை மின்சாரம் தடைபடுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மேலே சொன்ன காரணங்கள் இல்லாமலேயே, கடும் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications