Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குபதிவு நிலவரம் தெரிவிக்க கலெக்டர்களுக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நிலவரத்தை 2 மணிநேரத்தி்ற்கு ஒருமுறை 7 அறிக்கைகளாக அனுப்புமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, அனைத்து மாவட்டங்களிலும், ஊரகம், டவுன் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி வாரியாக 2 மணி நேரத்திற்கு 1 முறை பதிவான வாக்கு விபரங்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் உடனுக்குடன் ஆய்வு செய்து தொகுப்பு அறிக்கை தயார் செய்ய உள்ளது. எனவே 2 மணிநேரத்திற்கு ஒருமுறை வாக்கு பதிவு நிலவரத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

வாக்கு பதிவு துவக்கப்பட்டது என்ற விபரத்தை காலை 7 -7.15 மணிக்குள் முதல் அறிக்கையாகவும், 9 மணி, 11 மணி, 1 மணி, 3 மணி, 5 மணி நிலவரங்களை 5 தனித்தனி அறிக்கைகளாக ஒவ்வொரு 2 மணிநேரம் முடிந்த 30 நிமிடங்களுக்கு உள்ளும் மாலை 6 மணிக்கு இறுதி அறிக்கையாக பதிவான வாக்குளின் விபரத்தையும் அனுப்ப வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+