ஓட்டு கேட்டு சென்ற அதிமுக வேட்பாளரின் காரை 'பதம் பார்த்த' யானைகள்

நீலகிரி மாவட்டம், வால்பாறை நகராட்சியில் அ.தி.மு.க. சார்பில் 16வது வார்டில் வேட்பாளராக நெல்லைசெல்வன் போட்டியிடுகின்றார். இவர் இஞ்சிப்பாறை கூடுதுறை பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டு, அருகிலுள்ள லேக்பிரிவு பகுதியில் ஆதரவளர்களுடன் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, காரை நோக்கி அவந்த 7 யானைகள், காரை சுற்றி நின்று தாக்கி சேதப்படுத்தின. இது குறித்து அ.தி.மு.க. வேட்பாளர் நெல்லைசெல்வனுக்கு தகவல் தெரிவி்க்கப்பட்டது. இதையடுத்து, அவரது ஆதரவாளர்களுடன் விரைந்து சென்று யானையை விரட்டினார். ஆனால் யானைகள் காரை விட்டு நகர மறுத்த தங்கள் பணியில் மும்முரமாயின.
அதன்பின் பொதுமக்களுடன் சேர்ந்து சத்தம் எழுப்பியும், தீப்பந்தம் ஏந்தி மிரட்டியும் யானைகளை ஒருவழியாக விரட்டினர். பின்பு வேட்பாளர் நெல்லை செல்வன் வேறு காரில் பத்திரமாக வீடுக்கு திரும்பிச் சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications