எதியூரப்பா கைதால் அத்வானி யாத்திரை அர்த்தமிழந்து விட்டது-காங். கருத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: எதியூரப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் மூலம் பாஜக மூத்த தலைவர் அத்வானி மேற்கொண்டுள்ள ரத யாத்திரை அர்த்தமிழந்து போய் விட்டது என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், ஊழல் வழக்கில் சிக்கி ஜாமீனுக்காக போராடுகிறார் எதியூரப்பா. அதேசமயம், பாஜக தலைவர் அத்வானி ஊழலை ஒழிக்கக் கோரி ரத யாத்திரை போகிறார். முதலில் இந்தயாத்திரையை கர்நாடகத்தில் அவர் தொடங்கியிருக்க வேண்டும். அதுதான் பொருத்தமாக இருந்திருக்கும். அதேபோல உத்தரகான்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் அவர்கள் தொடங்கியிருக்கலாம். அங்கெல்லாம் பாஜகவினர் ஊழல் புகார்களில் சிக்கியுள்ளனர்.
அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டிருக்கும் சமயத்தில், ஜாமீனுக்காக எதியூரப்பா போராடி வருவது துயரகரமானது என்றார் திவாரி.












Click it and Unblock the Notifications