சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி போதை பொருளுடன் இலங்கை வாலிபர் கைது
சென்னை: சென்னை விமான நிலையம் வழியாக இலங்கைக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருளை கடத்த முயன்ற இலங்கை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று 9.30 மணிக்கு இலங்கைக்கு செல்லும் விமானம் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் இலங்கை விமானத்தில் போதை பொருள் கடத்த போவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அப்போது இலங்கைக்கு புறப்பட தயாராக இருந்த தனியார் விமானத்தில் பயணிக்க வந்த ஒரு பயணியிடம் போதை தடுப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரிடம் இருந்த பையில் 4 காகித பொட்டலங்கள் இருந்தது. ஒவ்வொன்றும் அரை கிலோ எடை கொண்டதாகவும், கருப்பு நிற காகிதத்தால் சுற்றப்பட்டதாகவும் இருந்தது.
அந்த பொட்டலங்களை அதிகாரிகள் பிரித்து பார்த்த போது, அது போதை பொருள் என்பது தெரிந்து. அவரை கைது செய்த போலீசார், 2 கிலோ அளவுள்ள அந்த போதை பொருளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் இலங்கையை சேர்ந்த முகமது அன்சார் என்பது தெரிந்தது.
இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்த முகமது அன்சார், இங்கிருந்து இலங்கைக்கு போதை பொருளை கடத்த முயன்றது தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த போதை பொருள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications