கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி துவங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நெல்லை: கூடன்குளம் அணுமின் நிலையம் பணிகள் சம்பந்தமாக பீதியை கிளப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை கலெக்டர் செல்வராஜிடம், தூத்துக்குடி ராம்டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் காசிவேலு கோரிக்கை மனுக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து காசிவேலு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கூடன்குளம் அணுமின் நிலையம் தேச நலனுக்கும், மக்கள் நலனுக்கும் அத்தியாவசியமானது என்பதை உறுதியுடன் நம்புகிறோம். ஆனால் அணுமின் நிலையத்தின் மீது சிலர் புகார்களை குவித்து மக்களிடையே பீதியை கிளப்புகின்றனர். இதனால் இடிந்தகரையில் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூடன்குளம் அணுமின் நிலையம் சம்பந்தமாக ஜனநாயக உரிமையை தவறாய் பயன்படுத்தும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.வழிபாட்டு வளாகத்தை உண்ணாவிரதத்திற்கு அனுமதிக்க கூடாது. பீதியை கிளப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸ் அனுமதியில்லாமல் பள்ளி குழந்தைகளை திரட்டி உண்ணாவிரதத்தில் பங்கேற்க வைத்த நபர்கள் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கூடன்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பை உறுதி செய்து உற்பத்தியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications