ஓட்டுப் போட வந்த பாட்டி வாக்குச் சாவடியில் மரணம்
Subscribe to Oneindia Tamil
போளூர்: தள்ளாத வயதிலும் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த 85 வயது மூதாட்டி வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். போளூர் தொகுதிக்குட்பட்ட களம்பூர் டவுன் பஞ்சாயத்திலும் இன்று தேர்தல் நடந்து வருகிறது.
கமலாம்பாள் என்ற 85 வயது பெண்மணி களம்பூர் 2வது வார்டு பஞ்சாய்த்து தொடக்கப்பள்ளிக்கு வாக்களிக்க வந்தார். தள்ளாடி, தள்ளாடி வந்த கமலாம்பாள் வாக்குச்சாவடியை அடைந்ததும் திடீர் என்று மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிபோய் பார்த்ததில் அவர் மரணம் அடைந்தது தெரிய வந்தது.
தள்ளாத வயதிலும் வாக்களிக்க வந்த மூதாட்டி வாக்குச்சாவடியில் இறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications