திருவண்ணாமலையில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக முயற்சி: போலீஸ் குவிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் வாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்ற முயன்றுள்ளனர்.
தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் 31வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்குள் அதிமுகவினர் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
தேர்தல் அதிகாரிகளின் வார்த்தையையும் மீறு வாக்குச்சாவடிக்குள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைப் பார்தத் தேர்தல் ஏஜென்டுகள் அதிமுகவினரை தடுத்துள்ளனர். உடனே அதிமுகவினர் ஏஜென்டுகளுடன் தகராறு செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications