தேனி அருகே அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அரசு அதிகாரி சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் கூடலூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அரசு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் கரிகாலன் என்பவர் போட்டியிடுகின்றார்.
அவரை ஆதரித்து அதே நகராட்சியில் பில் கலெக்டராக பணிபுரியும் ராமர் என்பவர் தேர்தல் பிரசாரம் செய்து வந்தார்.
இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக வேட்பாளர் கரிகாலனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அரசு அதிகாரி ராமர் தேர்தல் கமிஷன் உத்தரவின்பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் அவருடன் பிரசாரத்தில் ஈடுபட்டதாக தலைமையாசிரியர் ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications