தனது ஓட்டை அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டதால் கோபம்-வாக்குச் சீட்டுடன் ஓடிய வேட்பாளர் கைது
கோபிச்செட்டிப்பாளையம்: அதிமுகவினர் தனது ஓட்டையே கள்ள ஓட்டுப் போட்டு விட்டதால் கடும் கோபமடைந்த வேட்பாளர் ஒருவர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து வாக்குச் சீட்டுக்களை அள்ளிக் கொண்டு ஓடினார். இதையடுத்து அவரை போலீஸார் விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர்.
கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் கணேசன். இவர் இன்றுகாலை ஓட்டுப் போடச் சென்றபோது ஏற்கனவே நீங்கள் ஓட்டுப் போட்டுவிட்டீர்கள் என தேர்தல் அலுவலர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட கணேசன் அதிர்ச்சி அடைந்தார். நானே வேட்பாளர், எனது ஓட்டையே கள்ள ஓட்டுப் போட்டு விட்டார்களா என்று கடுப்புடன் கூறினார்.
பின்னர் அதிமுகவினர்தான் இதற்குக் காரணம் என்றுகோபமாக கூறிய அவர் திடீரென அங்கிருந்து வாக்குச் சீட்டுக்களை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார். இதைப் பார்த்த போலீஸார் அவரை விரட்டிப் பிடித்துக் கைது செய்து வாக்குச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொண்டையம்பாளையத்தில் பரபரப்பு நிலவுகிறது. இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications