போர்க்குற்றம்: சம்மன் வாங்காமல் 'டிமிக்கி' கொடுத்த ராஜபக்சேவுக்கு புதிய தலைவலி
கொழும்பு: அமெரி்க்க நீதிமன்றத்தின் உத்தரவால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த இறுதிகட்டப்போரின்போது அந்நாட்டு ராணுவம் லட்சக்கணக்கான தமிழர்களை ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்தது. இது குறித்து முப்படைகளின் தளபதியான ராஜபக்சே மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டது. ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று உலகத் தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவ மீது அமெரிக்க நீதிமன்றங்கள் பலவற்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அந்த நீதிமன்றங்கள் ராஜபக்சேவுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகின்றன. ஆனால் அதிபர் மாளிகை அவற்றை பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பி வைத்து வருகிறது.
இதையடுத்து தமிழர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் புரூஸ் பெயின் ஒரு யோசனை கூறினார். அதன்படி இலங்கையில் இருந்து வெளியாகும் 2 முன்னணி ப்ததிரிக்கைகள் மற்றும் தமிழ்நெட் இணையதளத்தின் முதல் பக்கத்தில் ராஜபக்சேவுக்கு அனுப்பும் சம்மன் விவரத்தை பிரசுரிக்க உத்தரவிடுமாறு கொலம்பியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர்கள் கோரிக்கையை ஏற்று உத்தரவிட்டார். இதையடுத்து இலங்கையின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் தமிழ்நெட்டில் இந்த சம்மன் தற்போது பிரசுரமாகியுள்ளது. இதனால் ராஜபக்சேவுக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications