ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி 'கெடுத்த' 3 சகோதரிகள் கைது!

ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவர்கள் ரோஸ்மேரி சாக்விசிரா (28), சோபியா (26), நெட்காய் கோக்வாரா (24). அவர்கள் 3 பேரும் சகோதரிகள் ஆவர். அவர்கள் ஆண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் காரில் சென்று கொண்டிருந்த சகோதரிகள் 19 வயது வாலிபருக்கு லிப்ட் கொடுத்துள்ளனர். 3 பெண்கள் லிப்ட் கொடுத்ததால் சந்தோஷமாக காரில் ஏறிய வாலிபரை தங்கள் வீட்டுக்கு கடத்திச் சென்று அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதேபோல ராணுவ வீரர் ஒருவரைக் கடத்திச் சென்று தங்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரை சுட்டுக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், பொது மக்களை காக்கும் போலீஸ் ஒருவரையே கடத்திச் சென்று தங்களது இச்சையைத் தீர்த்துக் கொண்டுள்ளனர் அந்த காம வெறி பிடித்த சகோதரிகள்.
இந்த நிலையில் அவர்களின் செயல் குறித்து போலீஸாருக்குத் தெரிய வரவே அவர்களை போலீஸார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
3 சகோதரிகள் சேர்ந்து ஆண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த செயல் ஜிம்பாப்வேயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications