சேலத்தில் சிறையில் இருந்தே தேர்தலை சந்தித்த 4 திமுக வேட்பாளர்கள்
சேலம்: சேலத்தில் 4 திமுக வேட்பாளர்கள் சிறையில் இருந்தபடியே உள்ளாட்சித் தேர்தலை சந்தித்துள்ளனர்.
சேலம் மாநகராட்சி 30வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஜிம். ராமுவும், 39வது வார்டுக்கு அம்மாபேட்டையைச் சேர்ந்த அருள் என்பவரும் போட்டியிட்டனர்.
சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு 17வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாரப்பட்டி சுரேஷ் குமார் போட்டியிட்டார்.
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ராமுவும், அருளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தேர்தலுக்கு முன்பே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் சுரேஷ்குமார் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல சேலம் மாநகராட்சி 7வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அருணா சுந்தர் ஓட்டுக்காக பணம் கொடுக்கும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர்கள் 4 பேரும் சிறையில் இருந்தே உள்ளாட்சித் தேர்தலை சந்தித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications