பெங்களூர் மெட்ரோ ரயிலை ஓட்டப் போகும் விவசாயி மகள் பிரியங்கா- சைக்கிள் ஓட்டத் தெரியாதாம்!

கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வெளியே உள்ள ககலிபுராவைச் சேர்ந்தவர் பிரியங்கா(20). எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக் என்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ளார். பெங்களூரில் மெட்ரோ ரயில் ஓட்டுநராக உள்ளார். மெட்ரோ ரயில் ஓட்ட வேண்டும் என்ற அவரது கனவு நனவாகியுள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது,
நான் டெல்லியில் முதன்முதலாக மெட்ரோ ரயில் ஓட்டியபோது மிகவும் த்ரில்லாக இருந்தது. டெல்லியில் ஐந்தரை மாதங்கள் பயிற்சி பெற்ற பிறகே பெங்களூரில் ரயில் ஓட்டத் துவங்கினேன். ஓட்டுநர் சீட்டில் அமர்ந்து ரயிலை ஓட்டுவது ஒரு தனி அனுபவம்.
எனது தந்தை ஒரு விவசாயி. என் குடும்பத்தில் நான் தான் கடைக்குட்டி. ஆனால் நான் என் குடும்பத்தாரை விட அதிகமாக சம்பாதிக்கிறேன். சைக்கிளே ஓட்டத் தெரியாதவள் நம்ம மெட்ரோ ஓட்டுகிறாள் என்று எனது தாயார் அக்கம்பக்கத்தினரிடம் அடிக்கடி கூறுவார்.
பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். ரயிலை ஓட்டுகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த 2010ம் ஆண்டு மெட்ரோ ரயில் ஓட்டுநராக தேர்வு செய்யப்பட்டவர் பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications