ராமநாதபுரம் அருகே ஓட்டு போட்டால் ரூ.5,000 அபராதம் என அறிவித்ததால் கிராமத்தினர் அதிருப்தி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தெற்கு வாணி வீதியில், ஓட்டு போட்டால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதால் பலர் ஓட்டு போடாமல் வீடு திரும்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம், வாலாந்தரவை ஊராட்சித் தலைவர் பதவி தலித் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த முறை ஊராட்சித் தலைவராக இருந்த வாலாந்தரவை முனியாண்டி, இம்முறையும் போட்டியிடுகிறார்.
இந்த ஊராட்சிக்குட்பட்ட தெற்கு வாணி வீதியைச் சேர்ந்த சிலர், தங்கள் பகுதியினரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு, முனியாண்டி மறுத்துவிட்டார்.
இதனால், யாரும் ஓட்டு போடக் கூடாது என தெற்கு வாணி வீதியைச் சேர்ந்த கிராம தலைவர்கள் கட்டுப்பாடு விதித்தனர். மீறி ஓட்டு போடுபவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
ஊர் கட்டுப்பாடு காரணமாக, தெற்கு வாணி கிழக்கு, மேற்கு பகுதியில் உள்ள 750 பேருக்கும் மேற்பட்டோர் ஓட்டளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications