தேர்தல் புகார்கள் குறித்து ஆணையர் சோ.அய்யர் விசாரணை
மதுரை: உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு குறித்த புகார் மனுக்களின் மீது மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று விசாரிக்கிறார்.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று தமிழக மாநில தேர்தல் ஆணையக அலுவலகத்தில் சென்னை மாநகராட்சிக்கு 17ம் தேதி நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து விசாரிக்கிறார்.
இது தொடர்பான புகார் மனுக்களை அளித்த வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், புகார் மனுவில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் இந்த விசாரணையை மேற்கொள்ளப்படுகிறது. புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவத்திற்கு உரிய ஆவணங்களை பெற்று சரிபார்க்கப்படும்.
மேலும், மாநகராட்சி ஆணையர், மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், வாக்குச்சாவடி அதிகாரிகள் ஆகியோர்களிடம் இந்த புகார் குறித்து சோ.அய்யர் விசாரிப்பார். அப்போது வாக்குச்சாவடி பதிவேடு மற்றும் ஆவணங்களை நேரில் ஆய்வு செய்வார்இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 10.45 மணியளவில் மாநில தேர்தல் ஆணையருக்கு வந்த புகார் மனுக்களின் மீது இன்று பிற்பகலுக்கு மேல் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications