சபரிமலை மேல்சாந்தியாக பாலமுரளி நம்பூதிரி தேர்வு
Subscribe to Oneindia Tamil
சபரிமலை: சபரிமலை மேல்சாந்தியாக பாலமுரளி நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல மாளிகைபுரம் தேவி கோவிலின் தலைமை பூசாரியாக டி.கே.ஈஸ்வரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை புனித யாத்திரை சீசன் வரும் நவம்பரில் தொடங்கவுள்ளது. ஜனவரி வரை தொடரும் இந்த சீசனில் சுமார் 3 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் சபரிமலை மேல்சாந்தியை தேர்வு செய்ய திருவாங்கூர் தெவசம் போர்ட் குலுக்கல் நடத்தியது. இதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாலமுரளி என்பவர் சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார்.
இவரும் ஈஸ்வரனும் ஓராண்டு காலம் இந்தப் பதவியில் இருப்பர்.












Click it and Unblock the Notifications