விகேபுரம் அருகே கள்ள ஓட்டு போட்டவர் கைது
விகேபுரம்: விகேபுரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தில் கள்ள ஓட்டு போட்டவர் கைது செய்யப்பட்டார்.
விகேபுரம் அருகேயுள்ள அடையகருங்குளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் நேற்று நடந்தது. அடையகருங்குளம் குழந்தைகள் நல மையத்தில் 36ம் நம்பர் பூத் அமைக்கப்பட்டிருந்தது. மாலை 5 மணி்க்கு பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவர் வாக்களிக்க வந்தார். அவரது ஆவணங்களை சோதித்த அதிகாரிகள் அவரது கையில் மை வைத்து வாக்களிக்க அனுமதித்தனர். அவரும் வாக்களித்து விட்டு வெளியே வந்தார்.
அப்போது பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் திமுகவைச் சேர்ந்த சிவகாமிநாதன் பூத்தை பார்வையிட வந்தார். அவர் பரமசிவனை பார்த்து சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரித்தார். அவர் முன்னுக்கு பின்னாக பேசியதால் அவரது ஆவணங்கள் அதிகாரிகள் துணையுடன் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் பரமசிவனுக்கு பதில் வாக்களித்தது தெரிய வந்தது.
இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலர் சுப்புலெட்சுமி விகேபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அம்பை டிஎஸ்பி முத்து சங்கரலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். விகேபுரம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து பரமசிவனை கைது செய்தார்.
வாக்காளர்ளுக்கு டோக்கன்
விகேபுரம் நகராட்சியில் ஒரு பூத்தில் கூட்டம் அலைமோதியதால் வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
விகேபுரம் நகராட்சியின் 10,11வது வார்டு மக்களுக்காக அப்பகுதியில் உள்ள டானா தேசிய துவக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம்
அலைமோதியதால் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு 5 மணிக்கு பின்னரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. விகேபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டில்
வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் அளிப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
நெல்லை மாநகராட்சி 34வது வார்டில் அதிமுக, திமுக, மதிமுக என அனைத்து கட்சிகளும் ஓட்டு போட வாக்காளர்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்ததால்
அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தலையிட்டு வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்தனர். மூன்றடைப்பு பொன்னாக்குடி பகுதிகளில் நேற்று மாலை 3
மணி முதல் மழை கொட்டிய போதிலும் அதை பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களிக்க வந்தனர்.
உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லை மாநகராட்சியையொட்டியுள்ள பேட்டை, டவுன் பகுதிகளில் வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தன. தச்சநல்லூரில் போலீசார்
கடைகளை அடைக்க கடும் கெடுபிடி செய்தனர். இதனால் வியாபாரிகள் கடைகளை அடைத்துவி்ட்டு வீட்டுக்கு சென்றனர்.
மாநகராட்சி 12வது வார்டு திம்மராஜபுரத்தில் பூத் எண் 49ல் ஏவியில் தேர்தல் கமிஷன் சார்பில் ஒரு வீடியோ கிராபர் வாக்குப்பதிவை வீடியோ எடுத்தார். அவரிடம்
அங்கீகார கடிதம் இல்லை என கூறி அதிமுகவினர் கடும் ஆட்பேசம் தெரிவித்தனர். பின்னர் போலீசார் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்தனர். விகேபுரம்
நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு கரையார் பகுதி மக்களுக்கு இம்முறை வாக்குச்சாவடி சேர்வலாறில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 12 கிமீ
தூரம் செல்ல வசதி இல்லாததால் பலர் ஓட்டு போட செல்லவில்லை.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications