தென் ஆப்பிரிக்க பெண்களை பலாத்காரம் செய்து கொள்ளையடித்தவருக்கு 50 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

ஜோகனஸ்பர்க்: 'பேஸ்புக்' தகவல் பரிமாற்றம் மூலம் பல இளம்பெண்களை ஏமாற்றிக் கற்பழித்த வாலிபருக்கு 50 ஆண்டு சிறைத் தண்டனை அளித்து தென் ஆப்பிரிக்கா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாட்டின் ஜோகனஸ்பர்க் நகரை சேர்ந்தவர் தாபோ பெஸ்டர்(22). இவர் பேஸ்புக்கில் மாடலிங் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். தனது பெயர் தாமஸ் பெஸ்டர் என்றும், தன்னிடம் வருவோருக்கு மாடலிங் வாய்ப்பு அளிப்பதாக தெரிவித்து இருந்தார்.

இதை நம்பிய பல இளம்பெண்கள், தாபோ பெஸ்டரின் வலையில் விழுந்தனர். அவர்களில் பல பெண்களை பல இடங்களுக்கு அழைத்து சென்று பலமுறை பலாத்காரம் செய்தார் தாபோ. மேலும், 2 பணக்கார பெண்களை ஆயுதம் காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களையும் பறித்து கொண்டார்.

இப்படியாக குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த தாபோ போலீஸில் சிக்கினார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற விசாரணையின்போது கதறி அழுத தாபோ, தனக்கு பெற்றோர் யார் என தெரியாது எனவும், தன்னை வளர்த்த ஒரு குடிகார பாட்டியினால் பலமுறை செக்ஸ் கொடுமைகளை அனுபவித்ததாகவும் தெரிவித்தார்.

அவரது வாதங்களை கேட்ட நீதிபதி பெண்களை கற்பழித்து, அவர்களிடம் கொள்ளையடித்து உள்ள பெஸ்டன், சமுதாயத்திற்கு ஒரு ஆபத்தான நபர். தென் ஆப்பிரிக்காவில் ஆண்டுத்தோறும் 56,000க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்படுவது தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் உண்மையில் அதைவிட 9 மடங்கு அதிகமாக இருக்கும். எனவே பெஸ்டன் போன்றவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறி பெஸ்டனின் குற்றங்களுக்காக 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+