சொல்லாமல் கொள்ளாமல் ராணி மேரிக் கல்லூரிக்கு லீ்வு- வகுப்புக்கு வந்த மாணவிகள் ஏமாற்றம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள ராணி மேரிக் கல்லூரிக்கு சொல்லாமல், கொள்ளாமல் திடீரென விடுமுறை விடப்பட்டதால், கல்லூரிக்கு வந்த மாணவிகளும், ஆசிரியைகளும் பெரும் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.
சென்னையில் நேற்று மாநகராட்சித் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் எண்ணப்படவுள்ளது. இதில் ஒரு மையமாக ராணி மேரிக் கல்லூரியையும் சேர்த்துள்ளனர்.
மேலும் நேற்றுப் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் ராணி மேரிக் கல்லூரியில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. கல்லூரிக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரிக்கும் அக்டோபர் 27ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விடுமுறை குறித்த அறிவிப்பை உரிய முறையில் முன்கூட்டியே மாணவிகளுக்கும், ஆசிரியைகளுக்கும் கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
விடுமுறை விடப்பட்டது தெரியாமல் இன்றுகாலை ஆசிரியைகளும், மாணவிகளும் கல்லூரிக்கு வந்தனர். வந்த பிறகுதான் அவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது குறித்துத் தெரியவந்து குழப்பமடைந்தனர். பின்னர் கல்லூரியிலிருந்து அவர்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications