விருத்தாசலம் தேமுதிக எம்.எல்.ஏ-வின் ஓட்டை கள்ள ஓட்டுப் போட முயற்சி
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தேமுதிக எம்.எல்.ஏ-வின் ஓட்டை போட மர்மநபர் ஒருவர் முயன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில், 16வது வார்டு சக்தி மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடி எண்.20ல்
விருத்தாசலம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் முத்துகுமார் ஓட்டு இருந்தது.
இந்நிலையில் வாலிபர் ஒருவர் தனது பெயர் முத்துகுமார் என கூறி வரிசை எண்.545ஐ சொல்லி வாக்கு பதிவு செய்ய முயன்றார். அப்போது, ஓட்டுச் சாவடியில் இருந்த அதிகாரி மற்றும் ஏஜென்டுகள், பட்டியலில் உள்ள வரிசை எண்ணை சரிபார்த்த போது, அதில் விருத்தாசலம் எம்.எல்.ஏ. முத்துகுமாரின் படம் இருந்தது.
இதையடுத்து, வாலிபரிடம் உஷாரான அதிகாரிகள் அடையாள அட்டையைக் கேட்ட போது, உடனே அந்த வாலிபர் சுதாரித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த தகவல் முத்துகுமார் எம்.எல்.ஏ.விற்கு தெரியவர அவர் உடனே விரைந்து வந்து தனக்கு வாக்கை செலுத்தினார்.
அப்பாடா நூலையில் தப்பித்தோம் என தேமுதிக ஏஜெண்டுகளும், தேர்தல் அலுவலர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதே மன நிலையில் தான் தேமுதிக எம்.எல்.ஏ-வும் இருந்தாராம்.












Click it and Unblock the Notifications