For Daily Alerts
Just In
சொந்த ஊரில் தேர்தல் நடந்தும் ஓட்டுப் போட வராத ப.சிதம்பரம்
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எந்தத் தேர்தலையும் பொதுவாக தவற விடுவதில்லை. அவருக்கு சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் தான் வாக்கு உள்ளது. அங்கு சென்று அவர் தனது குடும்பத்தோடு வாக்களிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இன்று நடந்த 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலில், கண்டனூர் பேரூராட்சிக்கும் வாக்குப் பதிவு நடந்தது. ஆனால் ப.சிதம்பரம் ஓட்டுப் போட வரவில்லை.
எந்தத் தேர்தலையும் தவற விடாமல் வாக்களிக்கும் வழக்கம் கொண்ட ப.சிதம்பரம் இந்த முறை வாக்களிக்க வராதது அப்பகுதியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
Comments
English summary
Union Home Minister P.Chidambaram failed to vote in local body election today. He has vote in his home village Kandanur in Sivagangai district.
Story first published: Wednesday, October 19, 2011, 17:52 [IST]