சென்னை 7 வாக்குச் சாவடிகளில் மட்டும் நாளை மறு வாக்குப் பதிவு
சென்னை: சென்னையில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த முதல் கட்ட வாக்குப் பதிவின்போது பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாக திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் மேயர் வேட்பாளர்கள், கவுன்சிலர் வேட்பாளர்கள் புகார் கொடுத்தனர். அதிமுகவினர் சரமாரியாக கள்ள ஓட்டுக்கள் போட்டதாகவும், பூத் ஸ்லிப் கொடுக்காததால் பலரால் வாக்களிக்க முடியவில்லை என்றும், வாக்காளர் பட்டியலில் பலருடைய பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
தேர்தல் தொடர்பான புகார்களை மாநகராட்சி ஆணையர்ட கார்த்திகேயன், தேர்ல் பார்வையாளர்கள், வாக்குச் சாவடி அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வுக்குப் பின்னர் மாநிலத் தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில்,
தேர்தல் புகார்கள் தொடர்பாக நன்கு பரிசீலிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் விதிகளின்படி அனைத்து ஆதாரங்களும், விசாரணை அறிக்கைகளும் தொடர்புடைய நிகழ்வுகளும் கவனமாக ஆராய்ந்து 7 மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும்.
அதன்படி புரசைவாக்கம் ஆண்களுக்கான வாக்குச்சாவடி எண் 1740, 1743, அனைத்து வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி எண் 1746, கீழ்ப்பாக்கம் ரிசர்வ் வங்கி குடியிருப்பில் உள்ள பிரீமியர் பள்ளியில் உள்ள ஆண்களுக்கான வாக்குச்சாவடி எண் 1730, பெண்களுக்கான வாக்குச்சாவடி எண் 1730 அனைத்து வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி எண் 1731, சென்னை சேத்துப்பட்டில் உள்ள பெண்களுக்கான வாக்குச்சாவடி எண் 1836 ஆகிய 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அக்டோபர் 20-ம் காலை 7 மணிக்கு முதல் மாலை 5 மணிவரை நடைபெறும். ஏற்கெனவே வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளில்தான் மறுவாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதுபோல விடியோ பதிவு செய்யப்படும்.
மறுவாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
200க்கும் மேற்பட்ட வார்டுகளில் மறு வாக்குப் பதிவு தேவை என்று திமுகவும், 100க்கும் மேற்பட்ட வார்டுகளில் மறு வாக்குப் பதிவு தேவை என்று பாமகவும் கோரி வருகின்றன. இரு கட்சிகளும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி மறு தேர்தலுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதி்மன்றத்தில் வழக்கும் தொடர்நதுள்ளன. திமுகவோ, தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications