பெங்களூர்: காரிலேயே மதிய உணவை சாப்பிட்ட ஜெயலலிதா!
Subscribe to Oneindia Tamil

காலையில் தொடங்கிய விசாரணை தொடர்ந்து நடந்தது. பகலில் உணவு இடைவேளைக்காக நீதிமன்ற விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
அப்போது அவருக்காக பெங்களூர் 5 நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தது. அதை அவர் தனது காரிலேயே அமர்ந்து சாப்பிட்டார்.
முன்னதாக சிறப்பு விமானத்தில் எச்ஏஎல் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜெயலலிதா, அங்கிருந்து 20 கார்கள் அணிவகுக்க நீதிமன்றத்துக்கு வந்தார்.
அவர் வந்த பாதை முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications