செங்கன்னூர் கோவிலில் பல கோடி மதிப்பிலான கோபுர கலசம் திருட்டு

Subscribe to Oneindia Tamil

ஆலப்புழை: செங்கன்னூர் மூத்தவழி சுப்ரமணியன் சுவாமி கோவிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் என்ற உலோகத்தாலான கோபுர கலசத்தை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம், ஆலப்புழை அடுத்த செங்கன்னூரில் பண்டநாடு மூத்தவழி சுப்ரமணியன் சுவாமி கோவில் உள்ளது. 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை, கடந்த 2008ம் ஆண்டு ஜெர்மன் நாட்டு விஞ்ஞானிகள் குழு செயற்கைகோள் உதவியுடன் ஆராய்ந்தனர். அப்போது இந்த கோவில் கோபுர கலசம் 'இரிடியம்' என்ற அரியவகை உலோகத்தால் தயாரிக்கப்பட்டது என கண்டறிந்தனர்.

இந்த தகவலை அறிந்த பல வெளிநாட்டு குழுவினர் அங்கு வந்து கோவிலை பார்வையிட்டு இரிடியம் கோபுர கலசம் உள்ளதை உறுதி செய்தனர். மேலும் அந்த கோபுர கலசத்தை விற்குமாறு விலை கேட்டு கோவில் நிர்வாகத்தினரை தொந்தரவு செய்து வந்தனர்.

கோவில் கோபுர கலசத்தின் மதிப்பை அறிந்து, பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு குழுவினர் அதை வாங்க 10 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை விலை பேசியும், தோல்வி அடைந்தனர்.

இந்நிலையில் பல மறை இந்த கோபுர கலசத்தை திருடி செல்ல முயற்சிகள் நடந்தது. இதனை அடுத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோபுர கலசத்தை பாதுக்காக்க, கோவில் சார்பாக பாதுகாப்பு குழுவும் நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் நேற்று வழக்கம் போல மேல்சந்திகள் பூஜைகள் செய்வதற்காக கோவிலை திறந்தார். அப்போது கோபுர கலசம் மாயமாகி இருந்தது. கோவில் பின்புறம் ஏணி வைத்து அந்த கலசம் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.

தகவல் அறிந்து செங்கன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விலைமதிப்புள்ள இரிடியம் உலோக கோபுர கலசத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+