உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்த கையோடு அதிமுகவில் சேர்ந்த 2 திமுக கவுனசிலர்கள்
செங்கோட்டை: நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் 2 பேர் தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
ஆலங்குளம் யூனியனில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8வது வார்டு கவுன்சிலர் பிலிப் குமார், 14வது வார்டு கவுன்சிலர் மாரியப்பன் ஆகியோர் தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் முடிந்த கையோடு 2 கவுன்சிலர்கள் அதிமுகவில் இணைந்துள்ளது திமுகவினரை சற்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அமைச்சர் செல்லபாண்டியன் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
தூத்துக்குடியில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்ற தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குரிய வாக்குகள் எண்ணும் பணி அங்குள்ள காமராஜர் கல்லூரியில் கடந்த 21ம் தேதி நடந்தது. அன்று மதியம் அமைச்சர் செல்லபாண்டியன் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றார். இது குறித்து மாநகராட்சி தேர்தல் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தேர்தல் விதிமுறையை மீறி நடந்து கொண்டதாக அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications