இலங்கை: தீபாவளியை முன்னிட்டு 400 விடுதலைப் புலிகள் விடுதலை
கொழும்பு: இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 400 விடுதலைப் புலிகள் தீபாவளியையொட்டி புதன்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இது குறித்து புனர்வாழ்வு மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் சந்திரஸ்ரீ கஜதீர கூறுகையில், புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சுமார் 400 பேர் சமூகமயப்படுத்தப்பட உள்ளனர்.
வரும் 26ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். சமீபத்தில் புனர்வாழ்வு நடவடிக்கைகளை பூர்த்தி செய்த சுமார் 1,800 பேர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உத்தரவால் விடுதலை செய்யப்பட்டனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட இந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான கல்வி, கலை மற்றும் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்துவதற்குரிய திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இவர்களது வாழ்வாதாரத்தை மேம்மடுத்துவதற்கான சிறப்பு கடன் வசதிகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துத்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications