தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது- 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும்!
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டும் அக்டோபர்24ம் தேதிதான் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது. அதேபோல இந்த ஆண்டும் அதே நாளில் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா மறறும் கடலோர ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் வட கிழக்குப் பருவ மழை அக்டோபர் 24ம் தேதி தொடங்கியது.
வங்கக் கடலில் மன்னார் வளைகுடா முதல் ஆந்திரா வரை காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, ஆந்திரா, கர்நாடக கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புண்டு.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரங்களில் அதிக அளவாக சங்கரன்கோவிலில் 10செமீ மழையும், செங்குன்றத்தில் 9 செமீ மழையும், பண்ருட்டியில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications