'உணவுப்பொருட்களின் விலை உயர்வு கவலை அளிக்கிறது' - பிரணாப்

கொல்கத்தாவில் நடந்த வருவாய் அதிகரிகள் கூட்டத்தில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி, பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது:
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. என்றாலும் விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறோம்.
2010-ம் ஆண்டு பணவீக்கம் 20 சதவீதமாக இருந்தது. அதை படிப்படியாக கட்டுப்படுத்தி தற்போது 10.6 சதவீதத்துக்கு கொண்டு வந்து இருக்கிறோம். இன்னும் குறைக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது மாநிலத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார். இதுபற்றி பிரதமரிடம் பேசுவேன்.
மேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நலத்திட்டங்களை நிறைவேற்ற கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்றும் மம்தாபானர்ஜி கோரி வருகிறார். இதுபற்றி நான் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் பேசுவேன்," என்றார்.












Click it and Unblock the Notifications