சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவர் சக மாணவர்களால் அடித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வந்த மாணவரை சக மாணவர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் டுட்டா. அவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வந்தார். அவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை விடுதியில் தங்கியிருந்த 2 பீகார் மாநில மாணவர்கள் டுட்டாவை அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்த தகவல் காட்டுத் தீ போல பரவியதால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் போலீசார் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விரைந்து சென்று மாணவர் டுட்டா உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications